Posts

Showing posts from October, 2023

ஆண்டு தோறும் இலக்கிய யாத்திரை - எமர்ஸன் நினைவு இலக்கிய முகாம், பூன்

Image
சென்ற ஒரு வருடத்தில், என் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும், உடன் பணிபுரிபவர்களுக்கும், எனது இலக்கிய ஆர்வமும், ஜெ மேல் நான் கொண்டிருக்கும் பக்தி கலந்த மரியாதையும் புரிந்து விட்டிருந்தது. சிலர் என்னிடம், மே ஜூன் மாதங்களிலேயே இவ்வருடம் பூன் முகாம் உண்டா என்றும், ஜெ அமெரிக்கா வருகிறாரா என்பது பற்றியும் விசாரிக்க தொடங்கிவிட்டார்கள்.  இவ்வருட பூன் முகாம் பற்றிய அறிவிப்பு வந்ததும், மனது சென்ற வருட பூன் முகாமை அசைபோட துவங்கியது. எத்துணை கறாரான வழிமுறைகளுடன் நடத்தப்பட்ட நிகழ்வு, அத்துணை கொண்டாட்டமாக, இன்றுவரை தித்திப்பான நினைவுகளுடனும் என் நினைவில் ஏன் என்று யோசித்தால், ஜெ சொல்வது தான் நினைவிற்கு வருகிறது ‘உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல்’ என வள்ளுவன் வகுத்த வகையிலேயே நிகழ்வுகள் ஒருங்கிணைக்க படுகின்றன.  ஒவ்வொரு முறை சபரிமலை சென்று அதே ஐயப்பனை தரிசிக்கும் போதும், நமக்கு வாய்ப்பது புதுப்புது அனுபவம். அதேபோல் 2 ம் வருடம் பூன் சென்று சந்தித்த பழைய நண்பர்களும், புதிய நண்பர்களும், மதிப்பிற்குரிய ஜெயும் எனக்கு அளித்தது புத்தம் புதிய அனுபவம். இவ்வருடம் ஜெ சற்று இளைத்து இருந்தார் ஆனால் உற்சாகம் பல மடங்கு க