Posts

Showing posts from May, 2026

story 1

யாரோ காலேஜ்ல தீக்குளிச்சிட்டான், அதனால காலேஜ் இன்னிக்கு கெடையாது எப்ப தெறப்பாங்கன்னு தெரியாது என்பதுதான் அன்றைய பேசுபொருள். 18 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் அந்த காலேஜ்க்கு பெரிய ஸ்டுடென்ட்ஸ் கூட்டம் பாலக்கரை காய்கறி மார்க்கெட்டிலிருந்து எப்போதும் கிளம்பும். இன்னிக்கி செமஸ்டர் லீவு முடிஞ்சி, ஒரு மாசம் கழிச்சு புது செமஸ்டர் காலேஜ் பர்ஸ்ட் டே. ராமன் எப்போதும் போல கோபால் வீட்டுக்கு வரும்போதே அங்க ஏற்கனவே வந்துவிட்ட மாறன் தீக்குளிப்பு சம்பவத்தை சொல்லிக்கொண்டிருந்தான்.  ராமன் படிக்கறது ஈவினிங் காலேஜ்,  டே காலேஜ் பசங்க திரும்பி வந்து இந்தவிஷயத்தை அரைகொறையா சொல்லிட்டு போய்ட்டாங்க போல, மார்க்கெட்ல இருந்த பாலு சொல்லித்தான் மாறனுக்கு தெரியும். இப்ப என்ன செய்ய? படத்துக்கு போவோமா இல்ல கேரம் வெளயாடலாமான்னு பெரிய டிஸ்கஷன். கோபால் அம்மா சொன்னா, மொதனாலும் அதுவுமா ஏன்டா கட் அடிக்கிறீங்க, போயிட்டு வாங்கடா அப்படீன்னு. ராமன் சொன்னான் ஆமாண்டா, நம்மளும் எப்பத்தாண்டா தீக்குளிஞ்சவன பாக்கறது போய் பாப்போண்டா. சரின்னு பஸ் ஏறினார்கள் அந்த மூவரும்.  கும்பகோணத்தில இருந்து திருப்பனந்தாள் பஸ்ல ப...