Posts

Showing posts from 2026

story 1

யாரோ காலேஜ்ல தீக்குளிச்சிட்டான், அதனால காலேஜ் இன்னிக்கு கெடையாது எப்ப தெறப்பாங்கன்னு தெரியாது என்பதுதான் அன்றைய பேசுபொருள். 18 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் அந்த காலேஜ்க்கு பெரிய ஸ்டுடென்ட்ஸ் கூட்டம் பாலக்கரை காய்கறி மார்க்கெட்டிலிருந்து எப்போதும் கிளம்பும். இன்னிக்கி செமஸ்டர் லீவு முடிஞ்சி, ஒரு மாசம் கழிச்சு புது செமஸ்டர் காலேஜ் பர்ஸ்ட் டே. ராமன் எப்போதும் போல கோபால் வீட்டுக்கு வரும்போதே அங்க ஏற்கனவே வந்துவிட்ட மாறன் தீக்குளிப்பு சம்பவத்தை சொல்லிக்கொண்டிருந்தான்.  ராமன் படிக்கறது ஈவினிங் காலேஜ்,  டே காலேஜ் பசங்க திரும்பி வந்து இந்தவிஷயத்தை அரைகொறையா சொல்லிட்டு போய்ட்டாங்க போல, மார்க்கெட்ல இருந்த பாலு சொல்லித்தான் மாறனுக்கு தெரியும். இப்ப என்ன செய்ய? படத்துக்கு போவோமா இல்ல கேரம் வெளயாடலாமான்னு பெரிய டிஸ்கஷன். கோபால் அம்மா சொன்னா, மொதனாலும் அதுவுமா ஏன்டா கட் அடிக்கிறீங்க, போயிட்டு வாங்கடா அப்படீன்னு. ராமன் சொன்னான் ஆமாண்டா, நம்மளும் எப்பத்தாண்டா தீக்குளிஞ்சவன பாக்கறது போய் பாப்போண்டா. சரின்னு பஸ் ஏறினார்கள் அந்த மூவரும்.  கும்பகோணத்தில இருந்து திருப்பனந்தாள் பஸ்ல ப...

இலக்கிய பாலங்கள்: தென் கலிஃபோர்னியாவில் புத்தகக் கிளப் - 3ம் சந்திப்பு

முன்னமே திட்டமிட்டபடி மூன்றாவது புக் கிளப் சந்திப்பு 2026 ஜனவரி 10 ம் தேதி அனுவின் டஸ்டின் வீட்டில் நடந்தது. இம்முறை 12 உறுப்பினர்கள் வந்திருந்தனர். சமோசாவும், காபியும், பப்பாளி பழமும் அனைவருக்கும் தயாராக இருந்தது.  எனக்கு வீட்டின் தோட்டத்தை சூரிய வெளிச்சத்திலேயே பார்த்துவிடவேண்டும் என்று தோன்றியதால் கேட்டு பார்த்தேன் ஆனால் சிவப்ரியா திட்டமிட்டபடி நாலு மணிக்கு நிகழ்வை தொடங்கி ஆகவேண்டும் என்று உடனடியாக என் யோசனையை மறுத்துவிட்டாள். தோட்டத்தில் போதுமான விளக்கு வெளிச்சம் இருப்பதாகவும், இருட்டில் பார்ப்பது இன்னமும் நன்றாக இருக்கும் என்றும் அனு சொன்னது மட்டும் அல்லாமல் எங்கள் எல்லோரையும் நிகழ்வுக்கு பிறகு அழைத்து சென்று சுற்றி காட்டினார்கள்.  புத்தாண்டு பிறந்ததிலிருந்து காளிராஜ் அவ்வப்போது எங்கள் அனைவருக்கும் நினைவுறுத்தி ஒவ்வொருவரையும் அவரவர் பேசப்போகும் கதைகளை தேர்ந்தெடுக்க வைத்து, அந்த கதைகளுக்கு சுட்டி அளித்து ஒருவராக எங்களை எல்லாம் தயார் படுத்தி இருந்தார். சுந்தரும் அவ்வப்போது வாலிபால் விளையாட்டுக்கு இடையே நான் கதைகளை படித்து விட்டேனா என்று கேட்டுகொண்டிருந்தார்.  வழக்கம் ப...