Posts

ஆண்டு தோறும் இலக்கிய யாத்திரை - எமர்ஸன் நினைவு இலக்கிய முகாம், பூன்

Image
சென்ற ஒரு வருடத்தில், என் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும், உடன் பணிபுரிபவர்களுக்கும், எனது இலக்கிய ஆர்வமும், ஜெ மேல் நான் கொண்டிருக்கும் பக்தி கலந்த மரியாதையும் புரிந்து விட்டிருந்தது. சிலர் என்னிடம், மே ஜூன் மாதங்களிலேயே இவ்வருடம் பூன் முகாம் உண்டா என்றும், ஜெ அமெரிக்கா வருகிறாரா என்பது பற்றியும் விசாரிக்க தொடங்கிவிட்டார்கள்.  இவ்வருட பூன் முகாம் பற்றிய அறிவிப்பு வந்ததும், மனது சென்ற வருட பூன் முகாமை அசைபோட துவங்கியது. எத்துணை கறாரான வழிமுறைகளுடன் நடத்தப்பட்ட நிகழ்வு, அத்துணை கொண்டாட்டமாக, இன்றுவரை தித்திப்பான நினைவுகளுடனும் என் நினைவில் ஏன் என்று யோசித்தால், ஜெ சொல்வது தான் நினைவிற்கு வருகிறது ‘உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல்’ என வள்ளுவன் வகுத்த வகையிலேயே நிகழ்வுகள் ஒருங்கிணைக்க படுகின்றன.  ஒவ்வொரு முறை சபரிமலை சென்று அதே ஐயப்பனை தரிசிக்கும் போதும், நமக்கு வாய்ப்பது புதுப்புது அனுபவம். அதேபோல் 2 ம் வருடம் பூன் சென்று சந்தித்த பழைய நண்பர்களும், புதிய நண்பர்களும், மதிப்பிற்குரிய ஜெயும் எனக்கு அளித்தது புத்தம் புதிய அனுபவம். இவ்வருடம் ஜெ சற்று இளைத்து இருந்தார் ஆனால் உற்சாகம் பல மடங்கு க

கூடுதல் என்பது களிப்பு Boone Literary Camp

Image
ஒவ்வொருமுறை ஊட்டி முகாம் பற்றி படிக்கும் போதும், ஒருமுறையாவது அதில் கலந்து கொள்ளவேண்டும் என்று என் மனைவியிடம் புலம்பியிருப்பதால், அவளே, பூன் இலக்கிய முகாம் பற்றிய அறிவுப்பு வந்தவுடன் சிறிதும் நேரமெடுக்காமல் என் பெயரை பதிந்து கொள்ள சொன்னாள். மூன்று நாட்கள் இலக்கிய முகாமிற்கு போகிறேன் என்று ஊர் முழுவதும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தேன். என் நண்பர்களுக்கு, உடன் பணிபுரிபவர்களுக்கு நான் ஒரு வினோத ஜந்து போல ஆகிப்போயிருந்தேன். நண்பர்களும், குடும்பத்தாரும் என்னை பீதியுடனும், வியப்புடனும், பொறாமையுடனும் பார்க்கத்தொடங்கிருந்தனர். காதலில் விழுந்த ஒருவனுக்கு உலகமே இனிப்பது போல், எனக்கு ஒவ்வொரு நாளும் இனித்து வழிந்தது.  பதட்டத்தில் நான் விமான டிக்கெட்டை முதலில் சரியாக வாங்கி பின் சரிபார்க்கிறேன் பேர்வழி என்று ஒருநாள் தாமதமாக சார்லோட் விமானநிலையத்தில் இறங்குவதாக தவறாக மாற்றிவிட்டேன். வேங்கட பிரசாத் ( விபி)  என்னை தொலைபேசியில் அழைத்து, என்னை அவரது வீட்டிற்க்கு வரவேற்ற போதுதான், என் விமான டிக்கெட் தவறானது என்றே எனக்கு புரிபட்டது. மீண்டும் அவசரமாக அதிக பணம் செலவழித்து சரியான நாளில் வட கரோலினா சென்று

’சானெட் ரானெம்’ - உன்னுடைய வலியை நான் எடுத்துக்கொள்கிறேன்

எத்தனையோவித நிலங்கள், எத்தனையோவித  நீர்நிலைகள், எத்தனையோவித காலநிலைகள், எத்தனை பூக்கள், எத்தனை காய்கள், எத்தனை விதமான உயிர்கள், எத்தனையோவித உணவுகள், உடைகள், எத்தனையோவித கலைகள், கலாச்சாரங்கள் அத்தனையும் அனைவருக்குமானவை. வேறுபாடு என்பது வெறுப்பை விதைக்க அல்ல, அணைத்து அரவணைத்து, அள்ளிப்பருக. ஒவ்வொரு நாளும் இயற்கை நமக்கு உணர்த்துவது, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது. ஆஸ்திரேலிய ஊழித்தீயின் போது, சென்னை வெள்ளத்தின் போது, பல நூற்றாண்டு கால பட்டினி சாவுகளின் போது, கொரோனாவின் போது, நம்மால் என்ன செய்ய முடிந்தது, ஓடி ஒளிவது அன்றி! எவ்வளவு அவமானம்! எவ்வளவு வேதனை!! பல்லாயிரம் ஆண்டு கால பரிணாம வளர்ச்சியின் பின்னும், வேற்று கிரகத்திற்கு சக மனிதனை அனுப்பும் அளவு அறிவியல் வளர்ந்த பின்னும், நம்மால் இப்பேரழிவுகளை தடுக்கவோ, தாண்டவோ முடியாத போது, எங்கிருந்து வருகிறது எரிச்சல்? எங்கிருந்து வருகிறது இந்த குரோதம்? எங்கிருந்து முளைக்கிறது இந்த விரோதம்? எப்படி யானை என்ற பேருயிர்க்கு ஒரு சக மனிதனால் வெடிமருந்து வைத்த உணவை கொடுக்க முடிகிறது! ஒரு சில மனிதர்களால் ஆதரவற்ற எளிய மனித

சீரற்ற சிந்தனைகள் - 1

எதுவும் சிறிய துவக்கமே, நண்பர்களின் வலு மிகுந்த கைகள் பலம் சேர்க்கும் போது, நாம் பெரிதாய் வளர்வோம். இருத்தலின் அலைக்கழிப்பு. பிரியம் எனப்படுவது யாதெனில், எதோ ஒரு விதத்தில் புரிந்து கொள்ளப்படுதல். அளவுக்கு மீறிய அன்பெனும் நஞ்சு. நெஞ்சை அழுத்தும் விம்மலின் விசும்பல். பயம், அழுகை, மறதி, கோபம், சிரிப்பு, பொறாமை, வஞ்சம் போல அலட்சியமும் ஓர் ஆதார மனித பண்பு. நாம் மிக நேசிக்கும் ஒருவருக்கு நாமளிக்கும் ஆகச்சிறந்த பரிசே அவர் மிக விரும்பும் ஒரு நடிப்பைத்தான் இல்லையா? கருவறைவிட்டு வெளியே வரும்போதே பெண் தாயாகத்தான் வருகிறாள்

கொரோனா தொற்றும் - நம்மால் ஆனதும்

கொரோனா தொற்று பரவாமல் இருக்க, அரசாங்கம் மற்றும் நிர்வாகங்களின் யோசனையை ஏற்று அவரவர்தம் வீடுகளில் தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும்  தென் கலிஃபோர்னியாவில் வாழும் தமிழ் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் தமிழ் சங்கத்தின் வணக்கம். தமிழ் சங்கத்தின் தன்னார்வல தொண்டர்கள் கொரோனா தொற்று பற்றியும் அதனை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றியும் ஆலோசித்து ஒப்புக்கொண்ட சில செயல் முறைகளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள இந்த பதிவு. நீங்கள் இன்னும் நண்பர்களுடன் வெளியில் சுற்றிக்கொண்டு ஒன்றுமே நடக்காதது போல் வாழ்ந்து கொண்டிருந்தால், தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் அறிந்தோ அறியாமலோ கொரோனா தொற்று பரவ உங்களை ஒப்பு கொடுக்கிறீர்கள். நம்மால் தனித்து இருப்பதன் மூலம் (சமூக கூட்டங்களை தவிர்ப்பதின் மூலம்) தொற்று பரவாமல் தடுக்க முடியும் அதற்கும் மேலாக ஆரோக்கியமாக இருப்பதன் மூலம் பாதிப்பை குறைக்க மற்றும் தவிர்க்க முடியும். உங்களுக்கு இறை நம்பிக்கை இருந்தால், அனைவரின் நலனுக்காக பிரார்த்தியுங்கள். கூடுமானவரை பதட்டத்தை தவிர்த்து சரியான வழிகாட்டுதலை பின்பற்றுங்கள். WhatsApp வதந்திகளை நம்பாதீர்கள் மற்றும்

சமத்துவ உலகு படைக்கும் கொரோனா எனும் புதிய விதி

கடந்த சில நாட்களாக உங்கள் அனைவராலும் கொரோனா தொற்று மற்றும் அதனின் விளைவுகள் பற்றி,  திகட்ட திகட்ட தகவல் திரட்டப்பட்டிருக்கும். இன்னும் சொல்லப்போனால், உங்கள் விருப்பத்திற்கு மாறாக மேலதிக தகவல்கள் உங்கள் காதுகளில், கண்களில் திணிக்கப்பட்டிருக்கும். ஆம் நாம் தகவல் திணிப்பு யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதன் பாதகங்களை பேசிக்கொண்டும், தகவல் திணிப்பில் நம்மை ஒப்புக்கொண்டும், அதே தகவல்களை நாம் பிறர் மேல் திணித்துக்கொண்டும். இந்த கட்டுரையில் நான் எந்த வித தகவல்களையும் உபயோகிக்க போவதில்லை. இது முழுக்க முழுக்க என்னால் உணரப்பட்டது, எனக்கு புலப்பட்ட உணர்வை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியே இதனை எழுதுகிறேன். மனிதனெனும் சுயநல அரக்கன், இப்புவிக்கும் அதன் பிற உயிர்களுக்கும் செய்த, செய்து கொண்டிருக்கும் இன்னல்களை பொறுக்க மாட்டாமல், இயற்கை அன்னை அளிக்கும் எச்சரிக்கை இந்த கொரோனா என்னும் தொற்று. இதனால் பலருக்கும் பல இன்னல்கள் ஏற்படும் போதிலும், நாம் உணரும் ஓர் உண்மை என்பது, பல விஷயங்கள் நாம் செய்யவேண்டியது இல்லை என்பதே. அத்தியாவசிய பொருட்களுக்கும், வேலைகளுக்கும் எந்த ஒரு முக்கியத்துவமும் கொ

படித்ததில் புரிந்தது - 1

வெற்றியடைந்தவனின் அத்துமீறல் சகித்துக்கொள்ளப்படுகிறது      நான் மட்டுமே நான் . வேறெதுவும் அற்றவன் நான் .      சில முடிவுகள் , மனிதர்களை அதன்பின் பேச விடுவதில்லை .      எத்தனை அலங்காரப்படுத்தப்பட்டாலும் அசல்வாழ்வில் ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு அனாதை தான்      ஒரு சந்திப்பிற்கான மனநிலை மட்டும் இருக்கும் போது , எதுவுமே நம் கவனத்தை குலைப்பதில்லை . “ வாழ்வதென்பது நம்பிக்கையின்பாற்பட்டது , என் அன்பே , வாழ்வதென்பது ஒரு தீவிர வணிகம் , உன்னை நேசிப்பதைப் போல ” - Vikatan சரஸ்வதிகடாட்சம்னா என்ன ? மனசிலே தீயிருந்தா அவ வந்து ஒக்காந்தாகணும் . அதான் அவளோட விதி … - ஜெயமோகன்  நீங்கள் வெளிச்சத்தில் இருக்கிறீர்கள் என்றால் உயிர்ப்புடன் உள்ளவையெல்லாம் உங்களை பின்தொடரும் , இருட்டில் இருக்கிறீர்களென்றால் உங்கள் நிழல்கூட உங்களைவிட்டு அகன்றிருக்கும் . - மதுபால் ஒரு பெருங்கடலை கால் நனையாமல் கடக்க முடியலாம் . ஆனால் , ஒருமுறைகூட   கண்கள் நனையாமல் வாழ்க்கையை கடக்க முடியாது . - மதுபா

தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில்!!!

Image
தென் கலிபோர்னியா தமிழ் பள்ளியின் 8ம் ஆண்டுவிழா நிகழ்வின் ஒரு தொகுப்பு இவ்வருட பள்ளி ஆண்டு விழாவிற்கு, ஒரு புதிய துவக்கமாக, பெற்றோர்கள் அவர்களது நண்பர்களையும், உறவினர்களையும் கலந்து கொள்ள அழைக்கும் போதே, அமைப்பாளர்களுக்கு இவ்விழாவின் பிரம்மாண்டம் தெரிய துவங்கியது. இவ்விழாவின் மனம் திறந்த அழைப்பு, தென் கலிபோர்னியா மாகாணத்தில் தமிழர்கள் மத்தியில் ஒரு இன்ப அதிர்ச்சியை உருவாக்கியது வரலாறு. தோராயமாக 80க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், 60 ஆசிரியர்கள், 300 மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் என 800 பேரால் நிறைந்திருந்தது விழா அரங்கம். நமது தன்னார்வலர்களின், ஆசிரியர்களின் கைவண்ணத்தில் மற்றுமொரு குதூகலமான விழா. ஆறு மணித்தியாலங்கள் நீண்ட இவ்விழாவில்  ஒவ்வொரு மணித்துளியும் விழாவின் உச்சக்கட்டமே! அவையில் இருந்த அத்துணை குழந்தைகளும் மேடை ஏறி தமிழ்தாய் வாழ்த்திசைத்து, குத்துவிளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்ட விழா, குழந்தைகளின் பரிசளிப்பு தொடங்கியவுடன் வேகமெடுத்தது. சென்ற வருடம் போலவே இவ்வருடமும்,  பல்வேறுபட்ட போட்டிகளில் 215 பரிசுகளை வென்று ஆச்சரியபடுத்தினார்கள் நம் மாணவர்கள். சென்ற வருடம் 100 திருக்கு