Posts

Showing posts from 2025

இலக்கிய பாலங்கள்: தென் கலிஃபோர்னியாவில் புத்தகக் கிளப் - முதல் சந்திப்பு

Image
ஒரே ஆர்வத்தைச் சுற்றி சமூகங்கள் உருவாகின்றன. எங்களுக்காக அந்த ஆர்வம் இலக்கியம் . தமிழ் எழுத்தாளர் ஜெய்மோகன் அவர்களின் படைப்புகளை வாசித்து விவாதிக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்ற ஆன்லைன் சமூகத்தில் நான் நீண்ட காலமாக இருக்கிறேன். காலப்போக்கில் வாசகர்கள் அதிகரிக்க, அமெரிக்காவின் பல நகரங்களில் உள்ளூர் புத்தகக் கிளப்புகள் உருவாகத் தொடங்கின. டாலஸ் முதலில் தொடங்கியது—ஐந்து பேர் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். சிலர் சான் அன்டோனியோ, ஆஸ்டின் போன்ற இடங்களில் இருந்து பல மணி நேரம் ஓட்டி வந்து கலந்துகொள்கிறார்கள். ஒரு வருடத்திற்கும் மேலாக அவர்கள் ஆரோக்கியமாக இந்த முயற்சியைத் தொடர்ந்து வருகின்றனர். இதனால் ஊக்கமடைந்த பே ஏரியாவின் ஷாரதா , தனது கனவாக இருந்த புத்தகக் கிளப்பை அங்கே தொடங்கினார். அவருடைய கணவர் பிரசாத் உறுதியாக ஆதரவு அளித்தார்; பத்மநாபப்பிள்ளை மாதந்தோறும் படிக்க வேண்டிய கதைகளை பரிந்துரைத்தார். பே ஏரியா குழு விரைவில் வளர்ந்து, ஜெய்மோகன் அவர்களின் வருடாந்திர இலக்கிய முகாமில் குறைந்தது 15 பேர் கலந்து கொள்கிறார்கள். அவர்களது வாட்ஸ்அப் குழுவில் 40 பேர் இருந்தாலும், மாதாந்திர சந்திப்பில் 1...

இலக்கிய பாலங்கள்: தென் கலிஃபோர்னியாவில் புத்தகக் கிளப் - இரண்டாம் சந்திப்பு

Image
  November 23 காலை 10–12 மணி வரை கௌரி வீட்டில் VLC புக் கிளப் இரண்டாவது மீட்டிங் நடந்தது. பத்து பேர் வந்திருந்தோம் — 4 ஆண்கள், 6 பெண்கள். கார்த்திகேய ராஜாமணி முந்தைய மீட்டிங்கில் சொன்னபடி அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகளை எடுத்துக்கொண்டோம். ஆறு பேர் தாங்கள் தேர்ந்தெடுத்த கதைகளைப் பேசத் தயாராக வந்திருந்தார்கள்; நான் ஆசிரியர் பற்றி சுருக்கமான இன்ட்ரோ கொடுப்பேன் என்று சொல்லியிருந்தேன். வழக்கம் போல காளி வள்ளலார் பாட்டு ஒன்றைப் பாடி தொடங்கினார். பிறகு ஜெயமோகனின் இரண்டு ரூல்களை நினைவுபடுத்தினேன்: பேச்சு ஒன்றுடன் ஒன்று மோதக்கூடாது, எல்லாமே நேர எல்லைக்குள். இம்முறை 7 நிமிட ரூலையும் ட்ரை பண்ணினோம். சுந்தர் டைம் கீப் பண்றேன் என்றார். முத்துலிங்கம் இன்ட்ரோவுக்கு பே ஏரியா புக் கிளப் நண்பர்களின் நோட்ஸ் மிகவும் உதவியாக இருந்தது மற்றும் ஜெயமோகன்.இன் தளமும், சாரதி கொடுத்த மெட்டீரியல் எல்லாம் ரெஃபர் பண்ணினேன். பாதியில் சுந்தர் “ஏற்கனவே 9 நிமிடம் ஆகிடுச்சு”னு சொன்னதும் பதட்டமாகி ஒரு நிமிஷத்தில் முடிச்சிட்டேன். மீதியை பிறகு அவ்வப்போது சிறுகதை விவாதங்களுக்கு இடையில் சொன்னேன். என் தயாரிக்கப்பட்ட உரையை நா...

இலக்கியமும் நானும்

Image
சிறு வயதில் இருந்தே எனக்கு புத்தகங்கள் படிப்பது பிடித்தமான ஒன்று. என் தாயார் புத்தகங்கள் படிப்பதினால் அவரிடம் நல்ல பெயரெடுக்கவோ, அல்லது என்னை சுற்றி நடக்கும் எதிலும் விருப்பமில்லாமலோ, அல்லது எதனாலோ எனக்கு புத்தகம் படிப்பது வழக்கமாகி போனது. எப்போதும் ஒரு கனவுலகத்திலேயே வாழ்வதென்பது சுகமானது.  என் தாயார் புத்தகம் படித்தாலும் வேறு ஒருவரும் எங்கள் வீட்டில் புத்தகம் படிப்பது கிடையாது. புத்தகம் (பாட புத்தகம் தவிர) படிப்பது என்பது ஒரு கெட்ட பழக்கமாக பாவிக்கப்பட்டது எங்கள் இல்லத்தில்.  புத்தகம் படிக்காத நேரங்களில் நான் செய்யும் சேட்டைகளினால் (மாமரம் ஏறுவது, கிணத்தில் தொங்குவது, தெருவில் சண்டை செய்வது, மாடிக்கு மாடி தாவுவது) என் புத்தகம் படிக்கும் வழக்கம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள பட்டது என்று நினைக்கிறேன். தினமலர், தினத்தந்தி, வாரமலர், சிறுவர் மலர், மங்கையர் மலர், கல்கி போன்றவை மூன்றாம் வகுப்பு வரை என் பொழுதுகளை போக்கிக்கொண்டிருந்தன.  என்னை சமாளிக்க முடியாமல் என்னை திருவையாறில் இருக்கும் அம்மா வழி பாட்டியிடம் (அவர் நடுநிலை பள்ளி ஒன்றில் கணித ஆசிரியர், கண்டிப்புக்கு பெயர்...