Posts

இலக்கிய பாலங்கள்: தென் கலிஃபோர்னியாவில் புத்தகக் கிளப் - முதல் சந்திப்பு

Image
ஒரே ஆர்வத்தைச் சுற்றி சமூகங்கள் உருவாகின்றன. எங்களுக்காக அந்த ஆர்வம் இலக்கியம் . தமிழ் எழுத்தாளர் ஜெய்மோகன் அவர்களின் படைப்புகளை வாசித்து விவாதிக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்ற ஆன்லைன் சமூகத்தில் நான் நீண்ட காலமாக இருக்கிறேன். காலப்போக்கில் வாசகர்கள் அதிகரிக்க, அமெரிக்காவின் பல நகரங்களில் உள்ளூர் புத்தகக் கிளப்புகள் உருவாகத் தொடங்கின. டாலஸ் முதலில் தொடங்கியது—ஐந்து பேர் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். சிலர் சான் அன்டோனியோ, ஆஸ்டின் போன்ற இடங்களில் இருந்து பல மணி நேரம் ஓட்டி வந்து கலந்துகொள்கிறார்கள். ஒரு வருடத்திற்கும் மேலாக அவர்கள் ஆரோக்கியமாக இந்த முயற்சியைத் தொடர்ந்து வருகின்றனர். இதனால் ஊக்கமடைந்த பே ஏரியாவின் ஷாரதா , தனது கனவாக இருந்த புத்தகக் கிளப்பை அங்கே தொடங்கினார். அவருடைய கணவர் பிரசாத் உறுதியாக ஆதரவு அளித்தார்; பத்மநாபப்பிள்ளை மாதந்தோறும் படிக்க வேண்டிய கதைகளை பரிந்துரைத்தார். பே ஏரியா குழு விரைவில் வளர்ந்து, ஜெய்மோகன் அவர்களின் வருடாந்திர இலக்கிய முகாமில் குறைந்தது 15 பேர் கலந்து கொள்கிறார்கள். அவர்களது வாட்ஸ்அப் குழுவில் 40 பேர் இருந்தாலும், மாதாந்திர சந்திப்பில் 1...

இலக்கிய பாலங்கள்: தென் கலிஃபோர்னியாவில் புத்தகக் கிளப் - இரண்டாம் சந்திப்பு

Image
  November 23 காலை 10–12 மணி வரை கௌரி வீட்டில் VLC புக் கிளப் இரண்டாவது மீட்டிங் நடந்தது. பத்து பேர் வந்திருந்தோம் — 4 ஆண்கள், 6 பெண்கள். கார்த்திகேய ராஜாமணி முந்தைய மீட்டிங்கில் சொன்னபடி அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகளை எடுத்துக்கொண்டோம். ஆறு பேர் தாங்கள் தேர்ந்தெடுத்த கதைகளைப் பேசத் தயாராக வந்திருந்தார்கள்; நான் ஆசிரியர் பற்றி சுருக்கமான இன்ட்ரோ கொடுப்பேன் என்று சொல்லியிருந்தேன். வழக்கம் போல காளி வள்ளலார் பாட்டு ஒன்றைப் பாடி தொடங்கினார். பிறகு ஜெயமோகனின் இரண்டு ரூல்களை நினைவுபடுத்தினேன்: பேச்சு ஒன்றுடன் ஒன்று மோதக்கூடாது, எல்லாமே நேர எல்லைக்குள். இம்முறை 7 நிமிட ரூலையும் ட்ரை பண்ணினோம். சுந்தர் டைம் கீப் பண்றேன் என்றார். முத்துலிங்கம் இன்ட்ரோவுக்கு பே ஏரியா புக் கிளப் நண்பர்களின் நோட்ஸ் மிகவும் உதவியாக இருந்தது மற்றும் ஜெயமோகன்.இன் தளமும், சாரதி கொடுத்த மெட்டீரியல் எல்லாம் ரெஃபர் பண்ணினேன். பாதியில் சுந்தர் “ஏற்கனவே 9 நிமிடம் ஆகிடுச்சு”னு சொன்னதும் பதட்டமாகி ஒரு நிமிஷத்தில் முடிச்சிட்டேன். மீதியை பிறகு அவ்வப்போது சிறுகதை விவாதங்களுக்கு இடையில் சொன்னேன். என் தயாரிக்கப்பட்ட உரையை நா...

இலக்கியமும் நானும்

Image
சிறு வயதில் இருந்தே எனக்கு புத்தகங்கள் படிப்பது பிடித்தமான ஒன்று. என் தாயார் புத்தகங்கள் படிப்பதினால் அவரிடம் நல்ல பெயரெடுக்கவோ, அல்லது என்னை சுற்றி நடக்கும் எதிலும் விருப்பமில்லாமலோ, அல்லது எதனாலோ எனக்கு புத்தகம் படிப்பது வழக்கமாகி போனது. எப்போதும் ஒரு கனவுலகத்திலேயே வாழ்வதென்பது சுகமானது.  என் தாயார் புத்தகம் படித்தாலும் வேறு ஒருவரும் எங்கள் வீட்டில் புத்தகம் படிப்பது கிடையாது. புத்தகம் (பாட புத்தகம் தவிர) படிப்பது என்பது ஒரு கெட்ட பழக்கமாக பாவிக்கப்பட்டது எங்கள் இல்லத்தில்.  புத்தகம் படிக்காத நேரங்களில் நான் செய்யும் சேட்டைகளினால் (மாமரம் ஏறுவது, கிணத்தில் தொங்குவது, தெருவில் சண்டை செய்வது, மாடிக்கு மாடி தாவுவது) என் புத்தகம் படிக்கும் வழக்கம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள பட்டது என்று நினைக்கிறேன். தினமலர், தினத்தந்தி, வாரமலர், சிறுவர் மலர், மங்கையர் மலர், கல்கி போன்றவை மூன்றாம் வகுப்பு வரை என் பொழுதுகளை போக்கிக்கொண்டிருந்தன.  என்னை சமாளிக்க முடியாமல் என்னை திருவையாறில் இருக்கும் அம்மா வழி பாட்டியிடம் (அவர் நடுநிலை பள்ளி ஒன்றில் கணித ஆசிரியர், கண்டிப்புக்கு பெயர்...

மறுவரை செய்யப்படவேண்டிய "வெற்றி" என்பதன் பொருள்

Image
மறுவரை செய்யப்படவேண்டிய " வெற்றி " என்பதன் பொருள்  மதிப்பிற்குரிய ஆசிரியர்களே, துணைநிலை பணியாளர்களே, பெருமிதத்துடன் வந்திருக்கும் குடும்ப உறவுகளே, அதே அளவு பெருமிதத்துடன் வந்திருக்கும் நண்பர்களே, அனைத்திற்கும் மேலாக இங்கு குழுமியிருக்கும் என் சக (Woodbridge) மேல்நிலைப்பள்ளி பட்டதாரி மாணவர்களே! வருக! நாம் இத்தருணத்திற்கு வந்துவிட்டோம்! இன்றைய சமூகத்தில், சாதனைகளாக மதிக்கப்படுவது யாதெனில், பெற்ற மதிக்கத்தக்க பாராட்டுக்கள், பெறப்போகும் பட்டங்கள், அதிக ஊதியம் தரும் உத்தியோகம் அல்லது வரவேற்பறையில் இருக்கும் பதக்கங்களின் எண்ணிக்கைகள். எனினும் அதுவா வெற்றி என்பது உனக்கு?  நாம் அனைவரும், எதிர்காலத்தின் வாசலில் நின்றிருக்கும் இந்த வேளையில், ஒவ்வொருவருக்கும், வாழ்க்கையை பற்றிய தனித்துவமான கனவுகள், நம்பிக்கைகள்!! நான் ஆழமாக உங்கள் உவ்வொருவரையும் வலியுறுத்துவது என்னவென்றால் "நீங்கள் மனிதர்களாக வாழ பிறந்தவர்கள், மனித இயந்திரங்களாக மாறிவிட வேண்டியவர்கள் அல்ல". சட்டம், மருத்துவம், கட்டிட கலை, மற்றும் இன்ன பிற துறைகளில் நுழைய துடிக்கும் உங்களது குறிக்கோளை கைத்தட்டி பாராட்டும் நான்,...

ஆண்டு தோறும் இலக்கிய யாத்திரை - எமர்ஸன் நினைவு இலக்கிய முகாம், பூன்

Image
சென்ற ஒரு வருடத்தில், என் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும், உடன் பணிபுரிபவர்களுக்கும், எனது இலக்கிய ஆர்வமும், ஜெ மேல் நான் கொண்டிருக்கும் பக்தி கலந்த மரியாதையும் புரிந்து விட்டிருந்தது. சிலர் என்னிடம், மே ஜூன் மாதங்களிலேயே இவ்வருடம் பூன் முகாம் உண்டா என்றும், ஜெ அமெரிக்கா வருகிறாரா என்பது பற்றியும் விசாரிக்க தொடங்கிவிட்டார்கள்.  இவ்வருட பூன் முகாம் பற்றிய அறிவிப்பு வந்ததும், மனது சென்ற வருட பூன் முகாமை அசைபோட துவங்கியது. எத்துணை கறாரான வழிமுறைகளுடன் நடத்தப்பட்ட நிகழ்வு, அத்துணை கொண்டாட்டமாக, இன்றுவரை தித்திப்பான நினைவுகளுடனும் என் நினைவில் ஏன் என்று யோசித்தால், ஜெ சொல்வது தான் நினைவிற்கு வருகிறது ‘உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல்’ என வள்ளுவன் வகுத்த வகையிலேயே நிகழ்வுகள் ஒருங்கிணைக்க படுகின்றன.  ஒவ்வொரு முறை சபரிமலை சென்று அதே ஐயப்பனை தரிசிக்கும் போதும், நமக்கு வாய்ப்பது புதுப்புது அனுபவம். அதேபோல் 2 ம் வருடம் பூன் சென்று சந்தித்த பழைய நண்பர்களும், புதிய நண்பர்களும், மதிப்பிற்குரிய ஜெயும் எனக்கு அளித்தது புத்தம் புதிய அனுபவம். இவ்வருடம் ஜெ சற்று இளைத்து இருந்தார் ஆனால் உற்சாக...

கூடுதல் என்பது களிப்பு Boone Literary Camp

Image
ஒவ்வொருமுறை ஊட்டி முகாம் பற்றி படிக்கும் போதும், ஒருமுறையாவது அதில் கலந்து கொள்ளவேண்டும் என்று என் மனைவியிடம் புலம்பியிருப்பதால், அவளே, பூன் இலக்கிய முகாம் பற்றிய அறிவுப்பு வந்தவுடன் சிறிதும் நேரமெடுக்காமல் என் பெயரை பதிந்து கொள்ள சொன்னாள். மூன்று நாட்கள் இலக்கிய முகாமிற்கு போகிறேன் என்று ஊர் முழுவதும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தேன். என் நண்பர்களுக்கு, உடன் பணிபுரிபவர்களுக்கு நான் ஒரு வினோத ஜந்து போல ஆகிப்போயிருந்தேன். நண்பர்களும், குடும்பத்தாரும் என்னை பீதியுடனும், வியப்புடனும், பொறாமையுடனும் பார்க்கத்தொடங்கிருந்தனர். காதலில் விழுந்த ஒருவனுக்கு உலகமே இனிப்பது போல், எனக்கு ஒவ்வொரு நாளும் இனித்து வழிந்தது.  பதட்டத்தில் நான் விமான டிக்கெட்டை முதலில் சரியாக வாங்கி பின் சரிபார்க்கிறேன் பேர்வழி என்று ஒருநாள் தாமதமாக சார்லோட் விமானநிலையத்தில் இறங்குவதாக தவறாக மாற்றிவிட்டேன். வேங்கட பிரசாத் ( விபி)  என்னை தொலைபேசியில் அழைத்து, என்னை அவரது வீட்டிற்க்கு வரவேற்ற போதுதான், என் விமான டிக்கெட் தவறானது என்றே எனக்கு புரிபட்டது. மீண்டும் அவசரமாக அதிக பணம் செலவழித்து சரியான நாளில் வட கரோலின...

’சானெட் ரானெம்’ - உன்னுடைய வலியை நான் எடுத்துக்கொள்கிறேன்

எத்தனையோவித நிலங்கள், எத்தனையோவித  நீர்நிலைகள், எத்தனையோவித காலநிலைகள், எத்தனை பூக்கள், எத்தனை காய்கள், எத்தனை விதமான உயிர்கள், எத்தனையோவித உணவுகள், உடைகள், எத்தனையோவித கலைகள், கலாச்சாரங்கள் அத்தனையும் அனைவருக்குமானவை. வேறுபாடு என்பது வெறுப்பை விதைக்க அல்ல, அணைத்து அரவணைத்து, அள்ளிப்பருக. ஒவ்வொரு நாளும் இயற்கை நமக்கு உணர்த்துவது, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது. ஆஸ்திரேலிய ஊழித்தீயின் போது, சென்னை வெள்ளத்தின் போது, பல நூற்றாண்டு கால பட்டினி சாவுகளின் போது, கொரோனாவின் போது, நம்மால் என்ன செய்ய முடிந்தது, ஓடி ஒளிவது அன்றி! எவ்வளவு அவமானம்! எவ்வளவு வேதனை!! பல்லாயிரம் ஆண்டு கால பரிணாம வளர்ச்சியின் பின்னும், வேற்று கிரகத்திற்கு சக மனிதனை அனுப்பும் அளவு அறிவியல் வளர்ந்த பின்னும், நம்மால் இப்பேரழிவுகளை தடுக்கவோ, தாண்டவோ முடியாத போது, எங்கிருந்து வருகிறது எரிச்சல்? எங்கிருந்து வருகிறது இந்த குரோதம்? எங்கிருந்து முளைக்கிறது இந்த விரோதம்? எப்படி யானை என்ற பேருயிர்க்கு ஒரு சக மனிதனால் வெடிமருந்து வைத்த உணவை கொடுக்க முடிகிறது! ஒரு சில மனிதர்களால் ஆதரவற்ற எளிய ...

சீரற்ற சிந்தனைகள் - 1

எதுவும் சிறிய துவக்கமே, நண்பர்களின் வலு மிகுந்த கைகள் பலம் சேர்க்கும் போது, நாம் பெரிதாய் வளர்வோம். இருத்தலின் அலைக்கழிப்பு. பிரியம் எனப்படுவது யாதெனில், எதோ ஒரு விதத்தில் புரிந்து கொள்ளப்படுதல். அளவுக்கு மீறிய அன்பெனும் நஞ்சு. நெஞ்சை அழுத்தும் விம்மலின் விசும்பல். பயம், அழுகை, மறதி, கோபம், சிரிப்பு, பொறாமை, வஞ்சம் போல அலட்சியமும் ஓர் ஆதார மனித பண்பு. நாம் மிக நேசிக்கும் ஒருவருக்கு நாமளிக்கும் ஆகச்சிறந்த பரிசே அவர் மிக விரும்பும் ஒரு நடிப்பைத்தான் இல்லையா? கருவறைவிட்டு வெளியே வரும்போதே பெண் தாயாகத்தான் வருகிறாள்

கொரோனா தொற்றும் - நம்மால் ஆனதும்

கொரோனா தொற்று பரவாமல் இருக்க, அரசாங்கம் மற்றும் நிர்வாகங்களின் யோசனையை ஏற்று அவரவர்தம் வீடுகளில் தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும்  தென் கலிஃபோர்னியாவில் வாழும் தமிழ் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் தமிழ் சங்கத்தின் வணக்கம். தமிழ் சங்கத்தின் தன்னார்வல தொண்டர்கள் கொரோனா தொற்று பற்றியும் அதனை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றியும் ஆலோசித்து ஒப்புக்கொண்ட சில செயல் முறைகளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள இந்த பதிவு. நீங்கள் இன்னும் நண்பர்களுடன் வெளியில் சுற்றிக்கொண்டு ஒன்றுமே நடக்காதது போல் வாழ்ந்து கொண்டிருந்தால், தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் அறிந்தோ அறியாமலோ கொரோனா தொற்று பரவ உங்களை ஒப்பு கொடுக்கிறீர்கள். நம்மால் தனித்து இருப்பதன் மூலம் (சமூக கூட்டங்களை தவிர்ப்பதின் மூலம்) தொற்று பரவாமல் தடுக்க முடியும் அதற்கும் மேலாக ஆரோக்கியமாக இருப்பதன் மூலம் பாதிப்பை குறைக்க மற்றும் தவிர்க்க முடியும். உங்களுக்கு இறை நம்பிக்கை இருந்தால், அனைவரின் நலனுக்காக பிரார்த்தியுங்கள். கூடுமானவரை பதட்டத்தை தவிர்த்து சரியான வழிகாட்டுதலை பின்பற்றுங்கள். WhatsApp வதந்திகளை நம்பாதீர்கள் மற்...