Posts

story 1

யாரோ காலேஜ்ல தீக்குளிச்சிட்டான், அதனால காலேஜ் இன்னிக்கு கெடையாது எப்ப தெறப்பாங்கன்னு தெரியாது என்பதுதான் அன்றைய பேசுபொருள். 18 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் அந்த காலேஜ்க்கு பெரிய ஸ்டுடென்ட்ஸ் கூட்டம் பாலக்கரை காய்கறி மார்க்கெட்டிலிருந்து எப்போதும் கிளம்பும். இன்னிக்கி செமஸ்டர் லீவு முடிஞ்சி, ஒரு மாசம் கழிச்சு புது செமஸ்டர் காலேஜ் பர்ஸ்ட் டே. ராமன் எப்போதும் போல கோபால் வீட்டுக்கு வரும்போதே அங்க ஏற்கனவே வந்துவிட்ட மாறன் தீக்குளிப்பு சம்பவத்தை சொல்லிக்கொண்டிருந்தான்.  ராமன் படிக்கறது ஈவினிங் காலேஜ்,  டே காலேஜ் பசங்க திரும்பி வந்து இந்தவிஷயத்தை அரைகொறையா சொல்லிட்டு போய்ட்டாங்க போல, மார்க்கெட்ல இருந்த பாலு சொல்லித்தான் மாறனுக்கு தெரியும். இப்ப என்ன செய்ய? படத்துக்கு போவோமா இல்ல கேரம் வெளயாடலாமான்னு பெரிய டிஸ்கஷன். கோபால் அம்மா சொன்னா, மொதனாலும் அதுவுமா ஏன்டா கட் அடிக்கிறீங்க, போயிட்டு வாங்கடா அப்படீன்னு. ராமன் சொன்னான் ஆமாண்டா, நம்மளும் எப்பத்தாண்டா தீக்குளிஞ்சவன பாக்கறது போய் பாப்போண்டா. சரின்னு பஸ் ஏறினார்கள் அந்த மூவரும்.  கும்பகோணத்தில இருந்து திருப்பனந்தாள் பஸ்ல ப...

இலக்கிய பாலங்கள்: தென் கலிஃபோர்னியாவில் புத்தகக் கிளப் - 3ம் சந்திப்பு

முன்னமே திட்டமிட்டபடி மூன்றாவது புக் கிளப் சந்திப்பு 2026 ஜனவரி 10 ம் தேதி அனுவின் டஸ்டின் வீட்டில் நடந்தது. இம்முறை 12 உறுப்பினர்கள் வந்திருந்தனர். சமோசாவும், காபியும், பப்பாளி பழமும் அனைவருக்கும் தயாராக இருந்தது.  எனக்கு வீட்டின் தோட்டத்தை சூரிய வெளிச்சத்திலேயே பார்த்துவிடவேண்டும் என்று தோன்றியதால் கேட்டு பார்த்தேன் ஆனால் சிவப்ரியா திட்டமிட்டபடி நாலு மணிக்கு நிகழ்வை தொடங்கி ஆகவேண்டும் என்று உடனடியாக என் யோசனையை மறுத்துவிட்டாள். தோட்டத்தில் போதுமான விளக்கு வெளிச்சம் இருப்பதாகவும், இருட்டில் பார்ப்பது இன்னமும் நன்றாக இருக்கும் என்றும் அனு சொன்னது மட்டும் அல்லாமல் எங்கள் எல்லோரையும் நிகழ்வுக்கு பிறகு அழைத்து சென்று சுற்றி காட்டினார்கள்.  புத்தாண்டு பிறந்ததிலிருந்து காளிராஜ் அவ்வப்போது எங்கள் அனைவருக்கும் நினைவுறுத்தி ஒவ்வொருவரையும் அவரவர் பேசப்போகும் கதைகளை தேர்ந்தெடுக்க வைத்து, அந்த கதைகளுக்கு சுட்டி அளித்து ஒருவராக எங்களை எல்லாம் தயார் படுத்தி இருந்தார். சுந்தரும் அவ்வப்போது வாலிபால் விளையாட்டுக்கு இடையே நான் கதைகளை படித்து விட்டேனா என்று கேட்டுகொண்டிருந்தார்.  வழக்கம் ப...

இலக்கிய பாலங்கள்: தென் கலிஃபோர்னியாவில் புத்தகக் கிளப் - முதல் சந்திப்பு

Image
ஒரே ஆர்வத்தைச் சுற்றி சமூகங்கள் உருவாகின்றன. எங்களுக்காக அந்த ஆர்வம் இலக்கியம் . தமிழ் எழுத்தாளர் ஜெய்மோகன் அவர்களின் படைப்புகளை வாசித்து விவாதிக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்ற ஆன்லைன் சமூகத்தில் நான் நீண்ட காலமாக இருக்கிறேன். காலப்போக்கில் வாசகர்கள் அதிகரிக்க, அமெரிக்காவின் பல நகரங்களில் உள்ளூர் புத்தகக் கிளப்புகள் உருவாகத் தொடங்கின. டாலஸ் முதலில் தொடங்கியது—ஐந்து பேர் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். சிலர் சான் அன்டோனியோ, ஆஸ்டின் போன்ற இடங்களில் இருந்து பல மணி நேரம் ஓட்டி வந்து கலந்துகொள்கிறார்கள். ஒரு வருடத்திற்கும் மேலாக அவர்கள் ஆரோக்கியமாக இந்த முயற்சியைத் தொடர்ந்து வருகின்றனர். இதனால் ஊக்கமடைந்த பே ஏரியாவின் ஷாரதா , தனது கனவாக இருந்த புத்தகக் கிளப்பை அங்கே தொடங்கினார். அவருடைய கணவர் பிரசாத் உறுதியாக ஆதரவு அளித்தார்; பத்மநாபப்பிள்ளை மாதந்தோறும் படிக்க வேண்டிய கதைகளை பரிந்துரைத்தார். பே ஏரியா குழு விரைவில் வளர்ந்து, ஜெய்மோகன் அவர்களின் வருடாந்திர இலக்கிய முகாமில் குறைந்தது 15 பேர் கலந்து கொள்கிறார்கள். அவர்களது வாட்ஸ்அப் குழுவில் 40 பேர் இருந்தாலும், மாதாந்திர சந்திப்பில் 1...

இலக்கிய பாலங்கள்: தென் கலிஃபோர்னியாவில் புத்தகக் கிளப் - இரண்டாம் சந்திப்பு

Image
  November 23 காலை 10–12 மணி வரை கௌரி வீட்டில் VLC புக் கிளப் இரண்டாவது மீட்டிங் நடந்தது. பத்து பேர் வந்திருந்தோம் — 4 ஆண்கள், 6 பெண்கள். கார்த்திகேய ராஜாமணி முந்தைய மீட்டிங்கில் சொன்னபடி அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகளை எடுத்துக்கொண்டோம். ஆறு பேர் தாங்கள் தேர்ந்தெடுத்த கதைகளைப் பேசத் தயாராக வந்திருந்தார்கள்; நான் ஆசிரியர் பற்றி சுருக்கமான இன்ட்ரோ கொடுப்பேன் என்று சொல்லியிருந்தேன். வழக்கம் போல காளி வள்ளலார் பாட்டு ஒன்றைப் பாடி தொடங்கினார். பிறகு ஜெயமோகனின் இரண்டு ரூல்களை நினைவுபடுத்தினேன்: பேச்சு ஒன்றுடன் ஒன்று மோதக்கூடாது, எல்லாமே நேர எல்லைக்குள். இம்முறை 7 நிமிட ரூலையும் ட்ரை பண்ணினோம். சுந்தர் டைம் கீப் பண்றேன் என்றார். முத்துலிங்கம் இன்ட்ரோவுக்கு பே ஏரியா புக் கிளப் நண்பர்களின் நோட்ஸ் மிகவும் உதவியாக இருந்தது மற்றும் ஜெயமோகன்.இன் தளமும், சாரதி கொடுத்த மெட்டீரியல் எல்லாம் ரெஃபர் பண்ணினேன். பாதியில் சுந்தர் “ஏற்கனவே 9 நிமிடம் ஆகிடுச்சு”னு சொன்னதும் பதட்டமாகி ஒரு நிமிஷத்தில் முடிச்சிட்டேன். மீதியை பிறகு அவ்வப்போது சிறுகதை விவாதங்களுக்கு இடையில் சொன்னேன். என் தயாரிக்கப்பட்ட உரையை நா...

இலக்கியமும் நானும்

Image
சிறு வயதில் இருந்தே எனக்கு புத்தகங்கள் படிப்பது பிடித்தமான ஒன்று. என் தாயார் புத்தகங்கள் படிப்பதினால் அவரிடம் நல்ல பெயரெடுக்கவோ, அல்லது என்னை சுற்றி நடக்கும் எதிலும் விருப்பமில்லாமலோ, அல்லது எதனாலோ எனக்கு புத்தகம் படிப்பது வழக்கமாகி போனது. எப்போதும் ஒரு கனவுலகத்திலேயே வாழ்வதென்பது சுகமானது.  என் தாயார் புத்தகம் படித்தாலும் வேறு ஒருவரும் எங்கள் வீட்டில் புத்தகம் படிப்பது கிடையாது. புத்தகம் (பாட புத்தகம் தவிர) படிப்பது என்பது ஒரு கெட்ட பழக்கமாக பாவிக்கப்பட்டது எங்கள் இல்லத்தில்.  புத்தகம் படிக்காத நேரங்களில் நான் செய்யும் சேட்டைகளினால் (மாமரம் ஏறுவது, கிணத்தில் தொங்குவது, தெருவில் சண்டை செய்வது, மாடிக்கு மாடி தாவுவது) என் புத்தகம் படிக்கும் வழக்கம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள பட்டது என்று நினைக்கிறேன். தினமலர், தினத்தந்தி, வாரமலர், சிறுவர் மலர், மங்கையர் மலர், கல்கி போன்றவை மூன்றாம் வகுப்பு வரை என் பொழுதுகளை போக்கிக்கொண்டிருந்தன.  என்னை சமாளிக்க முடியாமல் என்னை திருவையாறில் இருக்கும் அம்மா வழி பாட்டியிடம் (அவர் நடுநிலை பள்ளி ஒன்றில் கணித ஆசிரியர், கண்டிப்புக்கு பெயர்...

மறுவரை செய்யப்படவேண்டிய "வெற்றி" என்பதன் பொருள்

Image
மறுவரை செய்யப்படவேண்டிய " வெற்றி " என்பதன் பொருள்  மதிப்பிற்குரிய ஆசிரியர்களே, துணைநிலை பணியாளர்களே, பெருமிதத்துடன் வந்திருக்கும் குடும்ப உறவுகளே, அதே அளவு பெருமிதத்துடன் வந்திருக்கும் நண்பர்களே, அனைத்திற்கும் மேலாக இங்கு குழுமியிருக்கும் என் சக (Woodbridge) மேல்நிலைப்பள்ளி பட்டதாரி மாணவர்களே! வருக! நாம் இத்தருணத்திற்கு வந்துவிட்டோம்! இன்றைய சமூகத்தில், சாதனைகளாக மதிக்கப்படுவது யாதெனில், பெற்ற மதிக்கத்தக்க பாராட்டுக்கள், பெறப்போகும் பட்டங்கள், அதிக ஊதியம் தரும் உத்தியோகம் அல்லது வரவேற்பறையில் இருக்கும் பதக்கங்களின் எண்ணிக்கைகள். எனினும் அதுவா வெற்றி என்பது உனக்கு?  நாம் அனைவரும், எதிர்காலத்தின் வாசலில் நின்றிருக்கும் இந்த வேளையில், ஒவ்வொருவருக்கும், வாழ்க்கையை பற்றிய தனித்துவமான கனவுகள், நம்பிக்கைகள்!! நான் ஆழமாக உங்கள் உவ்வொருவரையும் வலியுறுத்துவது என்னவென்றால் "நீங்கள் மனிதர்களாக வாழ பிறந்தவர்கள், மனித இயந்திரங்களாக மாறிவிட வேண்டியவர்கள் அல்ல". சட்டம், மருத்துவம், கட்டிட கலை, மற்றும் இன்ன பிற துறைகளில் நுழைய துடிக்கும் உங்களது குறிக்கோளை கைத்தட்டி பாராட்டும் நான்,...

ஆண்டு தோறும் இலக்கிய யாத்திரை - எமர்ஸன் நினைவு இலக்கிய முகாம், பூன்

Image
சென்ற ஒரு வருடத்தில், என் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும், உடன் பணிபுரிபவர்களுக்கும், எனது இலக்கிய ஆர்வமும், ஜெ மேல் நான் கொண்டிருக்கும் பக்தி கலந்த மரியாதையும் புரிந்து விட்டிருந்தது. சிலர் என்னிடம், மே ஜூன் மாதங்களிலேயே இவ்வருடம் பூன் முகாம் உண்டா என்றும், ஜெ அமெரிக்கா வருகிறாரா என்பது பற்றியும் விசாரிக்க தொடங்கிவிட்டார்கள்.  இவ்வருட பூன் முகாம் பற்றிய அறிவிப்பு வந்ததும், மனது சென்ற வருட பூன் முகாமை அசைபோட துவங்கியது. எத்துணை கறாரான வழிமுறைகளுடன் நடத்தப்பட்ட நிகழ்வு, அத்துணை கொண்டாட்டமாக, இன்றுவரை தித்திப்பான நினைவுகளுடனும் என் நினைவில் ஏன் என்று யோசித்தால், ஜெ சொல்வது தான் நினைவிற்கு வருகிறது ‘உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல்’ என வள்ளுவன் வகுத்த வகையிலேயே நிகழ்வுகள் ஒருங்கிணைக்க படுகின்றன.  ஒவ்வொரு முறை சபரிமலை சென்று அதே ஐயப்பனை தரிசிக்கும் போதும், நமக்கு வாய்ப்பது புதுப்புது அனுபவம். அதேபோல் 2 ம் வருடம் பூன் சென்று சந்தித்த பழைய நண்பர்களும், புதிய நண்பர்களும், மதிப்பிற்குரிய ஜெயும் எனக்கு அளித்தது புத்தம் புதிய அனுபவம். இவ்வருடம் ஜெ சற்று இளைத்து இருந்தார் ஆனால் உற்சாக...

கூடுதல் என்பது களிப்பு Boone Literary Camp

Image
ஒவ்வொருமுறை ஊட்டி முகாம் பற்றி படிக்கும் போதும், ஒருமுறையாவது அதில் கலந்து கொள்ளவேண்டும் என்று என் மனைவியிடம் புலம்பியிருப்பதால், அவளே, பூன் இலக்கிய முகாம் பற்றிய அறிவுப்பு வந்தவுடன் சிறிதும் நேரமெடுக்காமல் என் பெயரை பதிந்து கொள்ள சொன்னாள். மூன்று நாட்கள் இலக்கிய முகாமிற்கு போகிறேன் என்று ஊர் முழுவதும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தேன். என் நண்பர்களுக்கு, உடன் பணிபுரிபவர்களுக்கு நான் ஒரு வினோத ஜந்து போல ஆகிப்போயிருந்தேன். நண்பர்களும், குடும்பத்தாரும் என்னை பீதியுடனும், வியப்புடனும், பொறாமையுடனும் பார்க்கத்தொடங்கிருந்தனர். காதலில் விழுந்த ஒருவனுக்கு உலகமே இனிப்பது போல், எனக்கு ஒவ்வொரு நாளும் இனித்து வழிந்தது.  பதட்டத்தில் நான் விமான டிக்கெட்டை முதலில் சரியாக வாங்கி பின் சரிபார்க்கிறேன் பேர்வழி என்று ஒருநாள் தாமதமாக சார்லோட் விமானநிலையத்தில் இறங்குவதாக தவறாக மாற்றிவிட்டேன். வேங்கட பிரசாத் ( விபி)  என்னை தொலைபேசியில் அழைத்து, என்னை அவரது வீட்டிற்க்கு வரவேற்ற போதுதான், என் விமான டிக்கெட் தவறானது என்றே எனக்கு புரிபட்டது. மீண்டும் அவசரமாக அதிக பணம் செலவழித்து சரியான நாளில் வட கரோலின...