நம்ம புக் கிளப் காளிராஜ் வீட்டுல பெப்ரவரி மாதம் மீட் பண்ணும்போது, கீராவோட கதைகளை படிச்சு முடிச்ச உடனே, வெய்யில் , தமிழ்ப் பிரபா இவங்க ரெண்டு பேரையும் மார்ச் மீட்டிங்குக்கு எழுத்தாளர்களா பிக் பண்ணினோம் — ஏன்னா இரண்டு பேரும் தமிழ் லிட்டரரி ஃபெஸ்டிவலுக்கு வரப்போறாங்க. அவங்களை சதர்ன் கலிஃபோர்னியா வரை கூட்டிட்டு வரலாம்னு பிளான் பண்ணினோம். ஒரு எழுத்தாளரோட படைப்புலகை படித்துவிட்டு அதன் பிறகே அவர்களை நம்மளோட இலக்கிய கூட்டத்திற்கு கூட்டிட்டு வரணும்னு நினைச்சு, வெயில் கவிதைகளையும் தமிழ்ப் பிரபாவோட நாவலையும் நேரடியா அவங்ககிட்டயே கேட்டு PDF-ல வாங்கினோம். எல்லாரும் தனித்தனியா புக் வாங்கி செலவு பண்ண வேண்டாம்னு, அதே சமயம் எழுத்தாளருக்கு நேரடியா பயன் இருக்கும்னு இந்த வழியை தேர்ந்தெடுத்தோம். அவங்க ரெண்டு பேருமே பெரிய மனசு பண்ணி எங்களுக்கு எழுத்துக்களை ஷேர் பண்ணிக்கிட்டாங்க. எங்களுக்கு இது ரொம்ப பெரிய விஷயமா இருந்துச்சு. மார்ச் 14, 2026 அன்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை, நம்ம புக் கிளப்பின் ஐந்தாவது மீட்டிங்கை ஸ்ரீலதாவின் வீட்டில் நடத்த முடிவு செய்தோம். அவர் எல்லாரையும் அன்புடன் இன்வைட் செய்திருந்தார்,...