இர்வைன் தமிழ் புக் கிளப்பின் ஒன்பதாவது மீட்டிங் இன்று, ஜூன் 7, 2026. மாலை 5 மணி முதல் 7 மணி வரை, நண்பர்கள் கலந்து கொண்ட ஒரு அமைதியான, ஆனால் உள்ளுக்குள் பெரும் அலைகளை எழுப்பிய இரண்டரை மணி நேரம். வாழும் தமிழ் இலக்கிய விழா தந்துவிட்ட பல நல்ல விசயங்களில் இதுவும் ஒன்று. எங்களூர் (இர்வின், தென் கலிபோர்னியா) பொண்ணு, பாரதி காளிராஜ் ஒருங்கிணைத்ததால் எந்தவித குழப்பமும் இன்றி சுந்தரராமசாமி அரங்கிற்கு இரண்டாம் நாள் நடந்த "இந்தியா: உணவும் உணர்வும்" அரங்கிற்கு சென்று அமர்ந்தேன். ஆனால் அங்கே நான் முழுமையாக வாசிக்க வேண்டும் என்று நினைக்கவைத்த இரண்டு முக்கிய எழுத்தாளர்களை கண்டுபிடித்தேன் — லட்சுமி சரவணகுமார் மற்றும் சரவணகார்த்திகேயன். ஜூன் மாத கூடுகைக்கு நாங்கள் எடுத்துக்கொண்ட எழுத்தாளர் CSK என்று அழைக்கப்படும் சரவணகார்த்திகேயன். ஆறு கதைகள், ஆறு வாசிப்பாளர்கள், பலவிதமான உணர்வுகள். அவரது ஆறு கதைகளை வாசித்து விவாதித்த அந்த சில மணி நேரங்கள் எங்களை எவ்வளவு ஆழமாக உள்மனத்துக்குள் இழுத்துச் சென்றன என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. சில வாசிப்புகள் மனதைத் தொடும்; சில வாசிப்புகள் மனதைத் ...
November 23 காலை 10–12 மணி வரை கௌரி வீட்டில் VLC புக் கிளப் இரண்டாவது மீட்டிங் நடந்தது. பத்து பேர் வந்திருந்தோம் — 4 ஆண்கள், 6 பெண்கள். கார்த்திகேய ராஜாமணி முந்தைய மீட்டிங்கில் சொன்னபடி அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகளை எடுத்துக்கொண்டோம். ஆறு பேர் தாங்கள் தேர்ந்தெடுத்த கதைகளைப் பேசத் தயாராக வந்திருந்தார்கள்; நான் ஆசிரியர் பற்றி சுருக்கமான இன்ட்ரோ கொடுப்பேன் என்று சொல்லியிருந்தேன். வழக்கம் போல காளி பாட்டு ஒன்றைப் பாடி தொடங்கினார் ( போற்றி நின் பேரருள் – வள்ளலார்). பிறகு ஜெயமோகனின் இரண்டு ரூல்களை நினைவுபடுத்தினேன்: பேச்சு ஒன்றுடன் ஒன்று மோதக்கூடாது, எல்லாமே நேர எல்லைக்குள். இம்முறை 7 நிமிட ரூலையும் ட்ரை பண்ணினோம். சுந்தர் டைம் கீப் பண்றேன் என்றார். முத்துலிங்கம் இன்ட்ரோவுக்கு பே ஏரியா புக் கிளப் நண்பர்களின் நோட்ஸ் மிகவும் உதவியாக இருந்தது மற்றும் ஜெயமோகன்.இன் தளமும், சாரதி கொடுத்த மெட்டீரியல் எல்லாம் ரெஃபர் பண்ணினேன். பாதியில் சுந்தர் “ஏற்கனவே 9 நிமிடம் ஆகிடுச்சு”னு சொன்னதும் பதட்டமாகி ஒரு நிமிஷத்தில் முடிச்சிட்டேன். மீதியை பிறகு அவ்வப்போது சிறுகதை விவாதங்களுக்கு இடையில் சொன்னேன். எ...
ஒரே ஆர்வத்தைச் சுற்றி சமூகங்கள் உருவாகின்றன. எங்களுக்காக அந்த ஆர்வம் இலக்கியம் . தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் படைப்புகளை வாசித்து விவாதிக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்ற ஆன்லைன் சமூகத்தில் நான் நீண்ட காலமாக இருக்கிறேன். காலப்போக்கில் வாசகர்கள் அதிகரிக்க, அமெரிக்காவின் பல நகரங்களில் உள்ளூர் புத்தகக் கிளப்புகள் உருவாகத் தொடங்கின. டாலஸ் முதலில் தொடங்கியது—ஐந்து பேர் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். சிலர் சான் அன்டோனியோ, ஆஸ்டின் போன்ற இடங்களில் இருந்து பல மணி நேரம் ஓட்டி வந்து கலந்துகொள்கிறார்கள். ஒரு வருடத்திற்கும் மேலாக அவர்கள் ஆரோக்கியமாக இந்த முயற்சியைத் தொடர்ந்து வருகின்றனர். இதனால் ஊக்கமடைந்த பே ஏரியாவின் ஷாரதா , தனது கனவாக இருந்த புத்தகக் கிளப்பை அங்கே தொடங்கினார். அவருடைய கணவர் பிரசாத் உறுதியாக ஆதரவு அளித்தார்; பத்மநாபப்பிள்ளை மாதந்தோறும் படிக்க வேண்டிய கதைகளை பரிந்துரைத்தார். பே ஏரியா குழு விரைவில் வளர்ந்து, ஜெய்மோகன் அவர்களின் வருடாந்திர இலக்கிய முகாமில் குறைந்தது 15 பேர் கலந்து கொள்கிறார்கள். அவர்களது வாட்ஸ்அப் குழுவில் 40 பேர் இருந்தாலும், மாதாந்திர சந்திப்பில...
Comments
Post a Comment