இலக்கிய பாலங்கள்: நியூயார்க் மாநகரில் நிகழ்ந்த வாழும் தமிழ் இலக்கிய விழா
https://livingtamillitfest.org/
தென் கலிஃபோர்னியாவில் இருந்து அருண், மலர்விழி மணியம், காளிராஜ், பிரியா காளிராஜ், ஸ்ரீராம் காமேஸ்வரன் மற்றும் கல்லூரியில் படிக்கும் பாரதி காளிராஜ், ஸ்ரீநிதி ஸ்ரீராம் ஆகியோர் நியூயார்க் நகரில் நடக்கும் வாழும் தமிழ் விழாவிற்கு சென்றிருந்தோம்.
ஸ்ரீநிதி அவ்விழாவின் தொடக்க அமர்வை ஒருங்கிணைத்தார், பாரதி காளிராஜ் 2ம் நாளில் மாறும் "இந்தியா: உணவும் உணர்வும்" என்ற அமர்வை ஒருங்கிணைத்தார். இவ்விருவரும் நிகழ்வில் எழுத்தாளர்களின் உரைகளை ஒட்டி உடனுக்குடன் கேள்விகளை எழுப்பியும், எழுத்தாளர்களின் உரைகளை தொகுத்து சொல்லியும் பெரும்பாலோரின் பாராட்டுகளை பெற்றார்கள்.
இவ்விரு அமர்வுங்களின் பதிவு இங்கே:
தொடக்க அமர்வு:
இந்தியா: உணவும் உணர்வும் அமர்வு:
பாரதிக்கு நன்றி.
அவருக்காகத்தான் நான் அந்த அமர்வில் கலந்து கொண்டேன். ஆனால் அங்கே நான் முழுமையாக வாசிக்க வேண்டும் என்று நினைத்த இரண்டு முக்கிய எழுத்தாளர்களை கண்டுபிடித்தேன் — லட்சுமி சரவணகுமார் மற்றும் சரவணகார்த்திகேயன். நம் புத்தகக்குழுவின் அடுத்தடுத்த மாத வாசிப்புகளுக்கு இந்த இளம் எழுத்தாளர்களைத் தேர்வு செய்யலாம் என்று உங்களிடம் சொல்ல நினைத்தேன்.ஒரு மாதம் ஒரு பாரம்பரிய (legacy) எழுத்தாளர், அடுத்த மாதம் ஒரு நவீன (contemporary) எழுத்தாளர் — இவ்வாறு மாறி மாறி எடுத்துக்கொள்ளலாம்.
நம் புத்தக சங்கத்திற்க்காக தமிழ் பிரபா அவரது பேட்டை நாவல் 12 புத்தகங்களும், கோசலை 2 புத்தகங்களும் கொண்டு வந்திருந்தார், வெய்யில் பெருமாள் அவரது 6 கவிதை புத்தகங்களையும் இரு பிரதி கொண்டு வந்திருந்தார். அவ்விழாவில் வந்திருந்த அனைத்து எழுத்தாளர்களின் புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலோர் தமிழ் பிரபாவின் பேட்டை நாவலை தேடினார்கள், பிரபாவிடமே கேட்டார்கள். அத்தனை பேரிடமும் என்னிடம் பேட்டை 12 புத்தகங்கள் இருப்பது தெரிவிக்கப்பட்டது. எல்லோரும் என்னிடம் கேட்கும்போது எனக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது. நான் தென் கலிபோர்னியா நண்பர்களிடம் அனுமதி பெற்று 10 பேட்டை புத்தகங்களையும், ஒரு பிரதி வெய்யிலின் 6 புத்தகங்களையும் அங்கே விற்பனைக்காக கொடுத்துவிட்டேன். நிறைய நண்பர்கள் என்னிடம் அதற்க்காக நன்றி தெரிவித்தார்கள். நீங்கள் அப்போதே இந்த அளவு பேட்டை நாவலுக்கு வரவேற்பிருக்கும் என்று சொன்னபோதும் என்னால் இவ்வளவு புத்தகங்களை மட்டுமே கொண்டு வரமுடிந்தது என்று தமிழ் பிரபா திரும்ப திரும்ப வருத்தப்பட்டார்.
இடம் மற்றும் ஹோட்டல் முன்பதிவுக்காக மிக ஆரம்பத்திலேயே, முக்கியமான அளவில் நாங்கள் செய்த பங்களிப்பை அவர் பாராட்டினார். ஸ்ரீராம், இது முழுவதும் உங்கள் முயற்சியால்தான் சாத்தியமானது.எங்களை எல்லோரையும் ஒன்றாக இணைத்து, முன்னெடுத்து வந்ததற்கு மனமார்ந்த நன்றி.
Comments
Post a Comment